search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நாளை மற்றும் மறுதினம் ஆன்லைனில் வெளியீடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    திருமலை :

    திருப்பதியில் தரிசனம் செய்ய நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன் நாளை மறுதினம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது எனவே பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.300 கட்டணத்தில் ஏற்கனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்டது. தற்போது அது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும் இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 27,878 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,741 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×