search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலித்தார்.
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்று தரிசனம்

    4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    தடை உத்தரவு முடிவுக்கு வந்ததால் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கம்போல் திறக்கப்பட்டது.

    4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×