என் மலர்
ஆன்மிகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கன்னியாகுமரி உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1,008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நேற்று 1,008 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு 1,008 சங்குகளை சிவலிங்க வடிவில் வைத்து அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜபெருமாள் சிவகாமி அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர்.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு 1,008 சங்குகளை சிவலிங்க வடிவில் வைத்து அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜபெருமாள் சிவகாமி அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர்.
Next Story






