search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாலாயிரம் திவ்ய பிரபந்தம்
    X
    நாலாயிரம் திவ்ய பிரபந்தம்

    நாலாயிரம் திவ்ய பிரபந்தம்

    இந்த நாலாயிரம் பாடல்களும், முதலாயிரம் - 947 பாடல்கள், பெரிய திருமொழி - 1134 பாடல்கள், திருவாய்மொழி - 1102 பாடல்கள், இயற்பா - 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
    திருமாலைப் பற்றி பாடப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாக இருப்பது, ‘நாலாயிரம் திவ்ய பிரபந்தம்’. இது வைணவ வழிபாட்டாளர்களின் தமிழ்மறையாக இருக்கிறது. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும், திருமாலையும், அவரது அவதாரங்களையும் பற்றி எடுத்துரைக்கின்றன. இவற்றில் பெரும்பாலான பாடல்கள் ‘திவ்யதேசங்கள்’ எனப்படும் 108 வைணவத் திருத்தலங்களில் பாடப்பட்டுள்ளன.

    கி.பி. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாகக் கருதப்படும், 12 ஆழ்வார்களால் இந்தப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. அந்த பாசுரங்களின் எண்ணிக்கை 3,892 ஆகும். அதோடு திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ‘ராமானுஜர் நூற்றந்தாதி’யில் உள்ள 108 பாடல்களையும் சேர்த்து நாலாயிரம் என்ற எண்ணிக்கையில் சொல்லப்படுகிறது.

    இந்த நாலாயிரம் பாடல்களும், முதலாயிரம் - 947 பாடல்கள், பெரிய திருமொழி - 1134 பாடல்கள், திருவாய்மொழி - 1102 பாடல்கள், இயற்பா - 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நம்மாழ்வார் மட்டும் 1102 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

    நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்கள் அனைத்தையும், கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி என்பவர் தொகுத்துள்ளார்.
    Next Story
    ×