search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக குவிந்த பக்தர்கள் கூட்டம்.
    X
    திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஆலோசனை

    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற தொடர்ந்து பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
    திருமலை :

    திருப்பதியில் தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தரிசன டோக்கன் திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வழங்கப்படுகிறது.

    இந்த டோக்கனை பெற ஒருநாள் முன்னதாகவே பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    இன்று (புதன்கிழமை) தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் நாளை மறுநாளுக்கான டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டது.

    இதனால், நாளை தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக திட்டமிடாததால் இவ்வாறு நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற தொடர்ந்து பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால், வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

    பின்னர் அதனை அப்படியே நிறுத்தி விட்டு இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×