என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம்
Byமாலை மலர்20 Sep 2021 5:58 AM GMT (Updated: 20 Sep 2021 5:58 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனந்த பத்மநாபசாமி விரத பூஜையை முன்னிட்டு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாதம் மாதத்தில் சுக்ல பட்ச சதுர்த்தசி திதி அன்று அனந்த பத்மநாபசாமி விரத பூஜை நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான அனந்த பத்மநாபசாமி விரத பூஜை நேற்று காலை சதுர்த்தசி திதியில் நடந்தது.
விரத பூஜை முடிந்ததும் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராகசாமி கோவில் அருகில் புஷ்கரணி கரையில் வைக்கப்பட்டார். அங்கு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்கரணி புனிதநீரில் சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வதுநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாபசாமி விரத பூஜை ஆகிய நாட்களில் மட்டுமே ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
விரத பூஜை முடிந்ததும் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராகசாமி கோவில் அருகில் புஷ்கரணி கரையில் வைக்கப்பட்டார். அங்கு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்கரணி புனிதநீரில் சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வதுநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாபசாமி விரத பூஜை ஆகிய நாட்களில் மட்டுமே ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X