என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்
Byமாலை மலர்17 Sep 2021 8:05 AM GMT (Updated: 17 Sep 2021 8:05 AM GMT)
ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தென்கயிலாயமாக கருதப்படுகிறது. கோவிலில் 5 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு ‘ஸ்ரீ’ என்னும் சிலந்தி, ‘காள’ என்னும் நாகம், ‘ஹஸ்தி’ என்னும் யானை மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவ விக்ரகங்கள் வைக்கப்பட்டது. கலச ஸ்தாபனம், கலச பூஜை, புண்யாவதனம், சிறப்புப்பூஜைகள் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். பவித்ரோற்சவத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். பவித்ரோற்சவத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X