என் மலர்
ஆன்மிகம்

நவநீத கிருஷ்ணன்
நாகை நவநீத கிருஷ்ணன் கோவில் தேரோட்டம்
நாகை நவநீத கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர் கோவில் வளாகத்துக்குள் வலம் வந்தது.
நாகை நவநீத கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக நவநீதகிருஷ்ணன், ருக்மணி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து தேர் கோவில் வளாகத்துக்குள் வலம் வந்தது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக நவநீதகிருஷ்ணன், ருக்மணி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து தேர் கோவில் வளாகத்துக்குள் வலம் வந்தது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






