என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராமேசுவரம் கோவிலில் காற்றில் பறந்த சமூக இடைவெளி
Byமாலை மலர்31 Aug 2021 7:20 AM GMT (Updated: 31 Aug 2021 7:20 AM GMT)
ராமேசுவரம் கோவிலில் நேற்று அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களிலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து பலர் வழிபட்டனர்.
கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து வடக்கு ரத வீதி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் நேற்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
இதேபோல் தனுஷ்கோடி கடற்கரையிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து பலர் வழிபட்டனர்.
கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து வடக்கு ரத வீதி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் நேற்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
இதேபோல் தனுஷ்கோடி கடற்கரையிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X