என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிறுத்தொண்ட நல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்26 Aug 2021 6:58 AM GMT (Updated: 26 Aug 2021 6:58 AM GMT)
ஏரல் சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா கடந்த 17-ந் தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதனை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மதியம் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு பக்தர்கள் கோவிலில் மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்து கொண்டு வருதல் போன்ற நேமிச கடன்களை செலுத்தினர்.
இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் முன்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் வீட்டு முன் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். உலா சென்ற அம்மன் நேற்று காலையில் கோவில் வந்து சேரும் ஆனந்த நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்து வருவதால் கொடைவிழா அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மதியம் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு பக்தர்கள் கோவிலில் மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்து கொண்டு வருதல் போன்ற நேமிச கடன்களை செலுத்தினர்.
இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் முன்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் வீட்டு முன் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். உலா சென்ற அம்மன் நேற்று காலையில் கோவில் வந்து சேரும் ஆனந்த நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்து வருவதால் கொடைவிழா அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X