search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் நாழிக்கிணற்றில் நீராட தடை
    X
    திருச்செந்தூர் நாழிக்கிணற்றில் நீராட தடை

    திருச்செந்தூர் நாழிக்கிணற்றில் நீராட தடை

    பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று முன்தினம் முதல் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதனால் நாழிக்கிணறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் மட்டும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×