search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடுவது ஒத்திவைப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

    அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 டிக்கெட்டுகளை வெளியிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×