search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
    X
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ேராற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி பவித்ர மண்டபத்தில் உள்ள யாகசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்.

    அங்கு வைதீக காரியமர்மங்கள் நடந்தன. காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணியளவில் விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது.

    மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து இரவு 10 மணிவரை யாகசாலை பூஜைகள் நடந்தன.

    பவித்ரோற்சவத்தில் பெரிய ஜியர்சுவாமி, சின்னஜியர் சுவாமி, தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×