search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பால்குடம் ஊர்வலம்
    X
    பால்குடம் ஊர்வலம்

    மதுரை உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா

    மதுரை புதூர் 2-வது தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவ விழாவில் சுமங்கலி பூஜை, விளக்கு பூஜை, வளையல் அலங்காரம் நடந்தது.
    மதுரை புதூர் 2-வது தெருவில் சமயபுரம் மாரியம்மன் 7-வது ஆண்டு உற்சவ விழா நடந்தது. கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக விழா தொடங்கியது. விழாவில் சுமங்கலி பூஜை, விளக்கு பூஜை, வளையல் அலங்காரம் நடந்தது. பால்குடம் எடுத்து பக்தர்கள் அக்னிச்சட்டி, சக்தி கரகம் முளைப்பாரி விழா நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமங்கலிகளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் 46 வட்ட கழக செயலாளர் மருது, செங்குட்டுவன், வக்கீல் கார்த்திக் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
    Next Story
    ×