என் மலர்
ஆன்மிகம்

3-ம் பிரகாரத்தில் தங்க கேடயத்தில் உலா வந்த சாமி
ராமர் பாதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சி ரத்து: 3-ம் பிரகாரத்தில் தங்க கேடயத்தில் உலா வந்த சாமி
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி-அம்பாள் மறுவீட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடத்தப்பட்டன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 12-ந்தேதி அன்று சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது.
திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி-அம்பாள் மறுவீட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கெந்தமாதன பர்வத மண்டகப்படிக்கு மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று இரவு 7 மணியளவில் சாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்ககேடயத்தில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் பேஸ்கார்கள் கலைச்செல்வன், கமலநாதன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி-அம்பாள் மறுவீட்டிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கெந்தமாதன பர்வத மண்டகப்படிக்கு மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று இரவு 7 மணியளவில் சாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்ககேடயத்தில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் பேஸ்கார்கள் கலைச்செல்வன், கமலநாதன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






