என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜபாலி தீர்த்தத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்
    X
    ஜபாலி தீர்த்தத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்

    ஜாபாலி தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு

    திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறப்பிடம் பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறப்பிடம் பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் 30, 31-ந்தேதி கருத்தரங்கு நடந்தது. அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள், தொல்லியல் துறை அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள், தகவல்கள் பற்றிய விவரங்களை புத்தகமாக வெளியிடுவோம்.

    ஜபாலி தீர்த்தத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அது சார்ந்த முன்மொழிவுகளை வருவாய்த்துறைக்கு அனுப்பி உள்ளோம். அங்கு, ஆஞ்சநேயர் சிலை அமைப்பதுடன் ஒரு பூங்கா உருவாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×