என் மலர்
ஆன்மிகம்

திருப்பதி
திருப்பதி: உயர்ரக பசுக்களில் இருந்து கிடைக்கும் பொருட்களால் மூலவருக்கு நைவேத்தியம்
திருப்பதியில் ஏழுமலைகளை குறிக்கும் வகையில் 7 வகையான உயர்ரக பசுக்களை வாங்கி, அதில் இருந்து பெறப்படும் பால், நெய் ஆகியவற்றால் மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட உள்ளதாக, தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார பிரதிநிதி சபை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகார பிரதிநிதி சபை தலைவரும் முதன்மைச் செயல் அலுவலருமான கே.எஸ்.ஜவகர்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் புதிதாக ‘நவநீத சேவா’ என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பசுக்கள் அபிவிருத்தி செய்யப்படும். அதிகளவில் பால் பெறப்படும். பசுக்களை பராமரிக்க கால்நடை மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த நிபுணர்கள் மேற்பார்வையில் கோசாலைகள் செயல்படும். அதற்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமும் உறுதுணையாக இருக்கும்.
திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். காற்று மாசு இல்லா நகரமாக திருமலை உருவாக்கப்படும். அதற்காக, 35 பேட்டரி கார்கள் வாங்கி இயக்கப்பட உள்ளது. 2021-2022-ம் ஆண்டுக்கான டைரிகள், காலண்டர்கள் விரைவில் அச்சிடப்பட உள்ளன. அதில் 12 சீட் காலண்டர்கள் 15 லட்சமும், டீலக்ஸ் டைரிகள் 8 லட்சமும், சிறிய டைரிகள் 2 லட்சமும் அச்சிடப்படும்.
ஆந்திராவில் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் கோவில் கட்டும் பணி, கோவில் சீரமைப்புப்பணி ஆகியவற்றை சின்ன ஜீயர் சுவாமிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வார். அதில் 10 கோவில்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம் வாயில்பாடு கோவில் கட்டுமானப் பணிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சீதா, ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் கட்டுமானப் பணியை முடிக்க, மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.2 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலை, திருப்பதியில் உள்ள கோவில்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ரூ.2 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திருமலை, திருப்பதி, பலமநேரில் உள்ள கோசாலைகள் மேலும் சீரமைக்கப்படும். அங்கு புதிதாக உயர்ரக டெசி இன பசுக்கள் வளர்க்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பிரசாதத்துக்கு 30 கிலோ நெய் தேவைப்படுகிறது. அதற்கு டெசி இன பசுக்கள் 200-ல் இருந்து 300 பசுக்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட உள்ளன. பக்தர்கள் நெய் காணிக்கையாக வழங்கலாம். அந்த நெய் டெசி இன பசுக்களின் பாலில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளை குறிக்கும் வகையில் ஏழு வகையான உயர்ரக பசுக்களை வாங்கி, அதில் இருந்து கிடைக்கும் பால், நெய் ஆகியவற்றால் மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்படும். கோசாலை மூலமாக புதிய சேவை, புதுமையான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் மூலமாக இயற்கை சார்ந்த வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களால் சாமிக்கு பாரம்பரிய நைவேத்தியம் செய்யப்படும். தமிழகத்தில் பஞ்ச காவ்ய பொருட்கள் உள்பட 15 வகையான பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்து இன்னும் 4 மாதத்தில் வினியோகிப்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யாதவர்களின் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை நடத்துவது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.150 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அதன் மூலம் இரு தெலுங்கு மாநிலங்களில் ஊருக்கு ஒரு கோவில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார பிரதிநிதி சபை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகார பிரதிநிதி சபை தலைவரும் முதன்மைச் செயல் அலுவலருமான கே.எஸ்.ஜவகர்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் புதிதாக ‘நவநீத சேவா’ என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பசுக்கள் அபிவிருத்தி செய்யப்படும். அதிகளவில் பால் பெறப்படும். பசுக்களை பராமரிக்க கால்நடை மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த நிபுணர்கள் மேற்பார்வையில் கோசாலைகள் செயல்படும். அதற்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமும் உறுதுணையாக இருக்கும்.
திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். காற்று மாசு இல்லா நகரமாக திருமலை உருவாக்கப்படும். அதற்காக, 35 பேட்டரி கார்கள் வாங்கி இயக்கப்பட உள்ளது. 2021-2022-ம் ஆண்டுக்கான டைரிகள், காலண்டர்கள் விரைவில் அச்சிடப்பட உள்ளன. அதில் 12 சீட் காலண்டர்கள் 15 லட்சமும், டீலக்ஸ் டைரிகள் 8 லட்சமும், சிறிய டைரிகள் 2 லட்சமும் அச்சிடப்படும்.
ஆந்திராவில் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் கோவில் கட்டும் பணி, கோவில் சீரமைப்புப்பணி ஆகியவற்றை சின்ன ஜீயர் சுவாமிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வார். அதில் 10 கோவில்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம் வாயில்பாடு கோவில் கட்டுமானப் பணிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சீதா, ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் கட்டுமானப் பணியை முடிக்க, மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.2 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலை, திருப்பதியில் உள்ள கோவில்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ரூ.2 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திருமலை, திருப்பதி, பலமநேரில் உள்ள கோசாலைகள் மேலும் சீரமைக்கப்படும். அங்கு புதிதாக உயர்ரக டெசி இன பசுக்கள் வளர்க்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பிரசாதத்துக்கு 30 கிலோ நெய் தேவைப்படுகிறது. அதற்கு டெசி இன பசுக்கள் 200-ல் இருந்து 300 பசுக்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட உள்ளன. பக்தர்கள் நெய் காணிக்கையாக வழங்கலாம். அந்த நெய் டெசி இன பசுக்களின் பாலில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளை குறிக்கும் வகையில் ஏழு வகையான உயர்ரக பசுக்களை வாங்கி, அதில் இருந்து கிடைக்கும் பால், நெய் ஆகியவற்றால் மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்படும். கோசாலை மூலமாக புதிய சேவை, புதுமையான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் மூலமாக இயற்கை சார்ந்த வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களால் சாமிக்கு பாரம்பரிய நைவேத்தியம் செய்யப்படும். தமிழகத்தில் பஞ்ச காவ்ய பொருட்கள் உள்பட 15 வகையான பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்து இன்னும் 4 மாதத்தில் வினியோகிப்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யாதவர்களின் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை நடத்துவது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.150 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அதன் மூலம் இரு தெலுங்கு மாநிலங்களில் ஊருக்கு ஒரு கோவில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






