என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பேளூர், கஞ்சமலை கோவில்களில் ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் தரிசனம் ரத்து
Byமாலை மலர்5 Aug 2021 7:56 AM GMT (Updated: 5 Aug 2021 7:56 AM GMT)
கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை விழா பிரசித்தி பெற்றதாகும். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் ஆடி அமாவாசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, மேற்கண்ட தினங்களில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.
இதேபோல கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவிலிலும் 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் அன்றைய தினங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி இல்லை.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளதாக பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராதிகா, கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவில் செயல் அலுவலர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவிலிலும் 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் அன்றைய தினங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி இல்லை.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளதாக பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராதிகா, கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவில் செயல் அலுவலர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X