என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்5 Aug 2021 3:28 AM GMT (Updated: 5 Aug 2021 3:28 AM GMT)
ஆவணி திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய 10 திருவிளையாடல லீலைகள் நடக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா வருகிற இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் தான் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அந்த ஆவணி திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய 10 திருவிளையாடல லீலைகள் நடக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா வருகிற இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று காலை 10.50 மணிக்கு மேல் 11.14 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. தற்போது கொரோனா பரவலையொட்டி கோவிலில் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற உள்ளது. திருவிழாவில் 11-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.
17-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 20-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது.
கொரோனா காரணமாக கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளதால் திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.50 மணிக்கு மேல் 11.14 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. தற்போது கொரோனா பரவலையொட்டி கோவிலில் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற உள்ளது. திருவிழாவில் 11-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.
17-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 20-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது.
கொரோனா காரணமாக கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளதால் திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X