search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 8-ந்தேதி வரை தடை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை :

    ஆடிப் பெருவிழாகளால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிவிட கூடாது என்ற காரணத்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீட்டிப்பு செய்து நேற்று இரவு திடீரென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய கோவில்களிலும் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோவிலில் வழக்கம்போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×