என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை: கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்31 July 2021 5:37 AM GMT (Updated: 31 July 2021 5:37 AM GMT)
கள்ளழகர் கோவிலில் உற்சவர் கள்ளழகர் பெருமாள் தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்குகள் ஏற்றி வழிட்டனர்.
மதுரை அருகே கள்ளழகர் கோவிலில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதில் மூலவர் சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் விசுவரூப அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் கள்ளழகர் பெருமாள் தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்குகள் ஏற்றி வழிட்டனர். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் மலர் மாலைகளையும், எலுமிச்சம் பழங்களையும், சந்தனங்களையும் காணிக்கையாக செலுத்தி வணங்கினர்.
அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத 2- வது வெள்ளிக்கிழமையையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத 2- வது வெள்ளிக்கிழமையையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X