என் மலர்
ஆன்மிகம்

சோலைமலை முருகன் கோவில்
சோலைமலையில் வித்தக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை
முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் உள்ள வித்தக விநாயகருக்கு பக்தர்கள் அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்மங்கி மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
மதுரை அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி அங்குள்ள வித்தக விநாயகருக்கு பக்தர்கள் அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்மங்கி மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
அருகில் உள்ள மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தீபாராதனைகள், பூஜைகளும் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
அருகில் உள்ள மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தீபாராதனைகள், பூஜைகளும் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






