என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாரியம்மன் கோவில் ஆலமரத்தில் பால் வடிந்த அதிசயம்
Byமாலை மலர்13 July 2021 6:11 AM GMT (Updated: 13 July 2021 6:11 AM GMT)
பால் வடியும் ஆலமரத்துக்கு பட்டு வஸ்திரம் சாத்தி, பால் வடிந்த இடத்தில் மஞ்சள், குங்குமத்தால் சூலம் போல் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பம்பை, உடுக்கை அடித்து ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.
கண்ணமங்கலம் அருகே சின்னபுத்தூர் மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவில் எதிரே பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஆலமரத்தின் கிளையில் திடீரெனப் பால் வடிந்தது.
இந்தத் தகவல் காட்டுத்தீ போல் பரவியதும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் கோவில் முன்பு திரண்டு அம்மனை வழிபட்டனர். ஒருசிலர் பால் வடியும் ஆலமரத்துக்கு பட்டு வஸ்திரம் சாத்தி, பால் வடிந்த இடத்தில் மஞ்சள், குங்குமத்தால் சூலம் போல் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பம்பை, உடுக்கை அடித்து ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.
அப்போது ஓரிரு பெண்கள் அருள் வந்து ஆடினர். அவர்களிடம் பக்தர்கள் அருள்வாக்கு கேட்டனர். சாமி ஆடிய பெண்கள், கடந்த 2 ஆண்டுகளாக அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடத்தவில்லை. விரைவில் முறைப்படி திருவிழா நடத்த வேண்டும், எனக் கூறினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆலமரம் பால் வடியும் மரமாகும். அதன் கிளைகளில் வெடிப்பு ஏற்பட்டாலோ, இலைகளை கிள்ளினாலோ பால் போன்ற ஒரு திரவம் வடியும். இருப்பினும், ஆலமரத்தில் பால் வடிந்தது ஆச்சரியமாக உள்ளது, என்றனர்.
இந்தத் தகவல் காட்டுத்தீ போல் பரவியதும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் கோவில் முன்பு திரண்டு அம்மனை வழிபட்டனர். ஒருசிலர் பால் வடியும் ஆலமரத்துக்கு பட்டு வஸ்திரம் சாத்தி, பால் வடிந்த இடத்தில் மஞ்சள், குங்குமத்தால் சூலம் போல் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பம்பை, உடுக்கை அடித்து ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.
அப்போது ஓரிரு பெண்கள் அருள் வந்து ஆடினர். அவர்களிடம் பக்தர்கள் அருள்வாக்கு கேட்டனர். சாமி ஆடிய பெண்கள், கடந்த 2 ஆண்டுகளாக அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடத்தவில்லை. விரைவில் முறைப்படி திருவிழா நடத்த வேண்டும், எனக் கூறினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆலமரம் பால் வடியும் மரமாகும். அதன் கிளைகளில் வெடிப்பு ஏற்பட்டாலோ, இலைகளை கிள்ளினாலோ பால் போன்ற ஒரு திரவம் வடியும். இருப்பினும், ஆலமரத்தில் பால் வடிந்தது ஆச்சரியமாக உள்ளது, என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X