என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவ வழிபாடு
    X
    சிவ வழிபாடு

    பக்தியால் கிடைக்கும் சக்தி

    எது ஒன்றுடன் பக்தியை இணைத்தாலும், அது புனிதத்துவம் பெற்றதாகவும், சிறப்புக் குரியதாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில் பக்தியால் சிறப்பு பெறும் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    எது ஒன்றுடன் பக்தியை இணைத்தாலும், அது புனிதத்துவம் பெற்றதாகவும், சிறப்புக் குரியதாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில் பக்தியால் சிறப்பு பெறும் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    பக்தியோடு இறைவனுக்கு சாதத்தை படைத்து, அதை பிறருக்கு கொடுக்கும்போது பிரசாதமாக மாறிவிடுகிறது.

    பக்தியோடு பட்டினி கிடக்கும் போது, அது விரதம் என்ற பெயரைப் பெறுகிறது.

    தண்ணீரோடு பக்தியை சேர்க்கும் பொழுது, அது புனித தீர்த்தமாகி விடுகிறது.

    பக்தியின் நிமித்தமாக ஆலயங்களுக்கு பயணப்படும்போது, அது யாத்திரையாக மாறுகிறது.

    இறைவனைப் பற்றி பக்தியோடு இசைத்துப் பாடும்போது, அது கீர்த்தனை ஆகிறது.

    வீட்டில் உள்ள அனைவருமே பக்தியில் திளைக்கும்போது, அது கோவிலாகிறது.

    ஒருவருக்காக ஒரு செயலை செய்யும்போது அதில் பக்தி கலந்தால், அந்த செயல் சேவையாகிறது.

    நமது கடமைகளை பக்தியோடு செய்யும் போது, அது கர்மவினைப் பயனாக செயல்படுகிறது.

    பிரம்மச்சரியத்தோடு பக்தி இணையும்போது, அங்கே துறவறம் பிறக்கிறது.

    இல்லறத்துடன் பக்தி சேரும் போது, அங்கே ஆன்மிகம் நிலைக்கிறது.

    ஒருவனுக்குள் பக்தி நுழையும்போது, அவன் புனிதனாகிறான்.

    அந்த பக்தி அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்போது, அவன் ஞானியாகிறான்.
    Next Story
    ×