என் மலர்
ஆன்மிகம்

காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சாமியை படத்தில் காணலாம்.
ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
ஆனி மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் மோகனூர் சாலை காந்திநகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணிசாமி காலை 6.30 மணிக்கு முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெண்பட்டுடன் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தரிசனம் செய்தனர்.
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து சாமியை தரிசனம் செய்தனர்.
மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆனி கிருத்திகையையொட்டி சிறப்பு அலங்காரம் நடந்தது. வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெண்பட்டுடன் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தரிசனம் செய்தனர்.
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து சாமியை தரிசனம் செய்தனர்.
மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆனி கிருத்திகையையொட்டி சிறப்பு அலங்காரம் நடந்தது. வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






