என் மலர்
ஆன்மிகம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி.. இதற்கு தடை நீடிப்பு...
ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 மாதத்திற்குமேல் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடை அமலில் இருந்து வந்தது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கும், தீர்த்தத்தில் நீராடுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொரோனா பெருமளவில் குறைந்து வருவதன் எதிரொலியாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாக தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து எந்த ஒரு உத்தரவும் இது வரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் உத்தரவு வரும் வரையில் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருக்கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொரோனா பெருமளவில் குறைந்து வருவதன் எதிரொலியாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாக தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து எந்த ஒரு உத்தரவும் இது வரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் உத்தரவு வரும் வரையில் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருக்கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






