என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைப்பு
By
மாலை மலர்5 July 2021 3:00 AM GMT (Updated: 5 July 2021 3:00 AM GMT)

இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதேபோல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றுநோய் குறைந்து வருவதையொட்டி பஸ் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கியது. இதைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில், சந்திப்பு கைலாசநாதர் கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லவேண்டும் என்பதற்காக பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர். கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவிலில் ஆங்காங்கே சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கிறிஸ்தவ ஆலயங்களும், பள்ளிவாசல்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி அங்கும் தூய்மை பணி நடைபெற்றது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றுநோய் குறைந்து வருவதையொட்டி பஸ் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கியது. இதைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில், சந்திப்பு கைலாசநாதர் கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லவேண்டும் என்பதற்காக பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர். கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவிலில் ஆங்காங்கே சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கிறிஸ்தவ ஆலயங்களும், பள்ளிவாசல்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி அங்கும் தூய்மை பணி நடைபெற்றது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
