என் மலர்
ஆன்மிகம்

ஜெனகை மாரியம்மன்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நிறைவு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தபடி சமூக இடைவெளியுடன் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கோவில் வளாகத்திலேயே 17 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பிறகு அம்மனை அலங்கரித்து கோவில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்தனர்.
ஊரடங்கு காரணமாக கோவில் செயல் அலுவலர் இளமதி, பணியாளர்கள் கவிதா, சுபாஷினி, பிரியா, பார்வதி ஆகியோர் முளைப்பாரி எடுத்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்மன் முன்பாக வைத்தனர்.
பின்னர் பூ அலங்காரம் மற்றும் மின் ஒளியுடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தபடி சமூக இடைவெளியுடன் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
ஊரடங்கு காரணமாக கோவில் செயல் அலுவலர் இளமதி, பணியாளர்கள் கவிதா, சுபாஷினி, பிரியா, பார்வதி ஆகியோர் முளைப்பாரி எடுத்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்மன் முன்பாக வைத்தனர்.
பின்னர் பூ அலங்காரம் மற்றும் மின் ஒளியுடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தபடி சமூக இடைவெளியுடன் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
Next Story






