என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாகூர் சிவன் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்24 Jun 2021 7:51 AM GMT (Updated: 24 Jun 2021 7:51 AM GMT)
தேர்த்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் கோவில் உள்புறப்பாடு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக கோவில் உள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால் கடந்த ஆண்டு போலவே 10 நாட்களாக திருவிழா நடைபெற்றது.
நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் கோவில் உள்புறப்பாடு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக கோவில் உள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால் கடந்த ஆண்டு போலவே 10 நாட்களாக திருவிழா நடைபெற்றது.
நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் கோவில் உள்புறப்பாடு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X