என் மலர்
ஆன்மிகம்

ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா
2-வது ஆண்டாக பக்தர்கள் இல்லாமல் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா
ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக ராமேசுவரம் திட்டக்குடி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் எதிரே சாலையில் வைத்து ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
2-வது நாள் நிகழ்ச்சியாக தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் முன்பு ராமபிரான் விபீஷணருக்கு இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். 3-வது நாள் நிகழ்ச்சியாக கோவிலின் கருவறை சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் இல்லாமல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து வருகிறது. நேற்று ராவணசம்கார நிகழ்ச்சி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது. ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி ஆஞ்சநேயருடன் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தின் மேற்கு பிரகாரம் வாயில் பகுதிக்கு வருகை தந்தார். ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
இதில் கோவில் இணை ஆணையர் பழனிகுமார், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விபீஷணர் பட்டாபிஷேகம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் வைத்து நடைபெறாமல் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நாளை ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பகல் 12 மணிக்கு கோவிலின் கருவறை சன்னதியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டும் இதே போல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது நாள் நிகழ்ச்சியாக தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் முன்பு ராமபிரான் விபீஷணருக்கு இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். 3-வது நாள் நிகழ்ச்சியாக கோவிலின் கருவறை சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் இல்லாமல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து வருகிறது. நேற்று ராவணசம்கார நிகழ்ச்சி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது. ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி ஆஞ்சநேயருடன் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தின் மேற்கு பிரகாரம் வாயில் பகுதிக்கு வருகை தந்தார். ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
இதில் கோவில் இணை ஆணையர் பழனிகுமார், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விபீஷணர் பட்டாபிஷேகம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் வைத்து நடைபெறாமல் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நாளை ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பகல் 12 மணிக்கு கோவிலின் கருவறை சன்னதியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டும் இதே போல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






