search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைந்த பக்தர்களுடன் சில அடிதூரம் மட்டுமே இழுக்கப்பட்ட குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்
    X
    குறைந்த பக்தர்களுடன் சில அடிதூரம் மட்டுமே இழுக்கப்பட்ட குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்: சில அடிதூரம் மட்டுமே இழுக்கப்பட்டது

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக குறைந்த பக்தர்களுடன் சில அடி தூரம் மட்டுமே தேர் இழுக்கப்பட்டது.
    பிரசித்திபெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கடைசி நாளன்று தேர்த்திருவிழாவும், வைகாசி ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோவில் திருவிழாக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவரை தேரில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சில அடி தூரம் வடம் பிடித்து இழுத்து பின்னர் மீண்டும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதில் குறைந்த அளவு பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். அவர்கள் தேர் மீது உப்பு, மிளகாய் தூவியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் தேர் நிலை பகுதியை சுற்றி தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் தூரத்தில் நின்று சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    நேற்று ரம்ஜான் கொண்டாடிய வேளையில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தேர் திருவிழாவின் போது பயபக்தியுடன் தரிசனம் செய்தார். இது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×