search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமூலர்
    X
    திருமூலர்

    அசுபதி நட்சத்திரத்தையொட்டி திருமூலர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    ஆடுதுறை திருமூலருக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
    ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூரில் திருமந்திரம் அருளிய திருமூலருக்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அசுபதி நட்சத்திர நாளில் திருமூலருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி சித்திரை மாத அசுபதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி திருமூலருக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.

    இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சந்திரசேகரன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×