search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீகாளஹஸ்தி கோவில்
    X
    ஸ்ரீகாளஹஸ்தி கோவில்

    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று முதல் 2 மணி நேரம் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுபடியும், பக்தர்களின் உடல் நலம் கருதியும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுபடியும், பக்தர்களின் உடல் நலம் கருதியும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாளையில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தினமும் காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலில் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படும், அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, என கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×