என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் புதிதாக இணையதள சேவை தொடக்கம்
Byமாலை மலர்6 May 2021 9:10 AM GMT (Updated: 6 May 2021 9:10 AM GMT)
கொரோனா பரவலால் நேரில் வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில்புதிதாக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாளஹஸ்தி :
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் வெகு தொலைவில் இருக்கும் பக்தர்கள் ேநரில் வந்து சாமி தரிசனம் செய்ய முடியாமல் உள்ளனர்.
நேரில் வர முடியாத பக்தர்களுக்காக கோவில் அதிகாரிகள் நேற்று முதல் புதிதாக இணையதள சேவையை தொடங்கி உள்ளனர். இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபம் மற்றும் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் கோ பூஜை, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு நடக்கும் குங்குமார்ச்சனை, சகஸ்ர நாமார்ச்சனை, நித்ய கல்யாண உற்சவம், அர்ச்சனை, சொர்ண புஷ்ப அர்ச்சனை, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், மஹன்யாச ருத்ராபிஷேகம் உள்பட ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை ஆகியவற்றை இணையதளம் மூலம் பக்தர்கள் காணலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளை இணையதளம் மூலம் காண விரும்பும் பக்தர்கள் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்யலாம், என கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்தேகங்களுக்கு பக்தர்கள் எண்:08578-222240-யை தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் வெகு தொலைவில் இருக்கும் பக்தர்கள் ேநரில் வந்து சாமி தரிசனம் செய்ய முடியாமல் உள்ளனர்.
நேரில் வர முடியாத பக்தர்களுக்காக கோவில் அதிகாரிகள் நேற்று முதல் புதிதாக இணையதள சேவையை தொடங்கி உள்ளனர். இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபம் மற்றும் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் கோ பூஜை, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு நடக்கும் குங்குமார்ச்சனை, சகஸ்ர நாமார்ச்சனை, நித்ய கல்யாண உற்சவம், அர்ச்சனை, சொர்ண புஷ்ப அர்ச்சனை, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், மஹன்யாச ருத்ராபிஷேகம் உள்பட ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை ஆகியவற்றை இணையதளம் மூலம் பக்தர்கள் காணலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளை இணையதளம் மூலம் காண விரும்பும் பக்தர்கள் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்யலாம், என கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்தேகங்களுக்கு பக்தர்கள் எண்:08578-222240-யை தொடர்பு கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X