search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மாலை பவுர்ணமி கருடசேவை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவையில் இன்று உற்சவர் மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருமலை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் (கருடசேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதேபோல் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×