என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தரிசனத்துக்கு தடையால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடியது
Byமாலை மலர்27 April 2021 7:51 AM GMT (Updated: 27 April 2021 7:51 AM GMT)
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரம் :
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்தது.
இந்த உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் நேற்று முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் கோவிலின் உள்ளே சுவாமி, அம்பாள் சன்னதி பிரகாரங்கள், பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் பக்தர்கள் இல்லாமல் கோவிலின் உட்பகுதி முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டன.
ராமேசுவரத்திற்கு நேற்று மிகவும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். கோவிலில் தினமும் சுவாமிக்கு நடைபெறும் 6 கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்தது.
இந்த உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் நேற்று முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் கோவிலின் உள்ளே சுவாமி, அம்பாள் சன்னதி பிரகாரங்கள், பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் பக்தர்கள் இல்லாமல் கோவிலின் உட்பகுதி முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டன.
ராமேசுவரத்திற்கு நேற்று மிகவும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். கோவிலில் தினமும் சுவாமிக்கு நடைபெறும் 6 கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X