search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைத்தீஸ்வரன்கோவிலில் முதல் கால யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தியபோது எடுத்தபடம்.
    X
    வைத்தீஸ்வரன்கோவிலில் முதல் கால யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தியபோது எடுத்தபடம்.

    22 ஆண்டுகளுக்குப் பிறகு 29-ந்தேதி நடக்கிறது வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

    22 ஆண்டுகளுக்குப் பிறகு 29-ந்தேதி நடக்கும் வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கையொட்டி 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டது. அந்த யாகசாலை பூஜைகளை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ந்தேதி குடமுழுக்குவிழா நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. முன்னதாக காலை ஆதிவாரம், யாகசாலை தான்யம் வைத்தல், பரிவார கலா கர்‌ஷணம், யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து ருத்ராபிஷேகம், கடஸ்தாபனம், ருத்ரஹோமம் நடந்தது.

    பின்னர் மாலை ஆச்சாரியார்கள் ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்‌ஷனம் கடங்கள் யாகசாலை பிரவேசம் நடந்து முதல்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் நடந்தது.

    147 யாககுண்டங்களிலும் 108 வகையான வேதிகை, மூலிகை, நறுமன திரவிய பொருட்களை இட்டு சிவாச் சாரியர்கள் மந்திரங்கள் முழங்கி பூர்ணாஹூதி செய்விக்கப்பட்டு அனைத்து யாக சாலைகளிலும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.

    அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ் வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகளும் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×