என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா
Byமாலை மலர்23 April 2021 7:49 AM GMT (Updated: 23 April 2021 7:49 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்களான சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை வைபவ மண்டபத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவை நடந்தது. பின்னர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்களான சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தங்க வாசலில் ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் முதல் பட்டாபிஷேகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள சர்கா பாராயணம் செய்யப்பட்டது. அன்னப்பிரசாதம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் முதல் பட்டாபிஷேகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள சர்கா பாராயணம் செய்யப்பட்டது. அன்னப்பிரசாதம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X