என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழிக்கால் ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்22 April 2021 6:41 AM GMT (Updated: 22 April 2021 6:41 AM GMT)
குமரி மாவட்டம் களியக்காவிளை சிவபுரம் குந்நம் விளாகத்தில் ஆதிசிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டம் களியக்காவிளை சிவபுரம் குந்நம் விளாகத்தில் ஆதிசிவன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை, சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பர் சேரமான் பெருமாள் நாயனார் வந்து வழிபட்ட பெருமைக்குரிய கோவில் ஆகும்.
கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 11 மணிக்கு மேக்கோடு ஹரீஷ் ஆன்மிக சொற்பொழிவு, 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணி முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம்கால யாகசாலைபூஜை, மாலை 4 மணிக்கு யானை மீது பன்னிருதிருமுறை பெட்டகத்தை வைத்து களியக்காவிளை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமும், இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.
25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 8 மணிக்கு திருக்கைலாய செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனை, அன்னதானமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 11 மணிக்கு மேக்கோடு ஹரீஷ் ஆன்மிக சொற்பொழிவு, 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணி முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம்கால யாகசாலைபூஜை, மாலை 4 மணிக்கு யானை மீது பன்னிருதிருமுறை பெட்டகத்தை வைத்து களியக்காவிளை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமும், இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.
25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 8 மணிக்கு திருக்கைலாய செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனை, அன்னதானமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X