என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் 24-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
Byமாலை மலர்21 April 2021 9:08 AM GMT (Updated: 21 April 2021 9:08 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக இரண்டாவது நாள் நடக்கும் தங்கரதம் ரத்து செய்யப்படுகிறது. விழாவையொட்டி கோவில் கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சாமிக்கு திருமஞ்சனமும், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் செய்யப்படுகிறது.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
வசந்த உற்சவம் காரணமாக ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக இரண்டாவது நாள் நடக்கும் தங்கரதம் ரத்து செய்யப்படுகிறது. விழாவையொட்டி கோவில் கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சாமிக்கு திருமஞ்சனமும், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் செய்யப்படுகிறது.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
வசந்த உற்சவம் காரணமாக ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X