search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
    X
    பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

    பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

    பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோவிலில் திருவிழாவிற்கான கொடியேற்றப்படாமல் விழா நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 15-ந் தேதி இரவு விசாலாட்சி அம்பிகா சமேத சந்திர சேகர சுவாமி உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கு காப்பு கட்டப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று கொரோனா கட்டுப்பாடுகளால் திருவிழாவிற்கான கொடியேற்றப்படாமல் விழா நடந்தது. அதன்படி தினமும் கோவில் வளாகத்தில் மட்டும் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு விழா நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×