search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்த போது எடுத்த படம். (உள்படம் வண் புருஷோத்தம பெருமாள்).
    X
    பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்த போது எடுத்த படம். (உள்படம் வண் புருஷோத்தம பெருமாள்).

    நாங்கூர் வண்புருஷோத்தம பெருமாள் கோவில் தேரோட்டம்

    திருவெண்காடு அருகே நாங்கூர் வண் புருஷோத்தம பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மேள தாளம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவெண்காடு அருகே நாங்கூர் வண் புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது.

    ேதரோட்ட விழாவையொட்டி சாமியும், அம்மனும் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திரளான பக்தர்கள் மேள தாளம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதையடுத்்து தேர் நிலையத்ைத வந்தடைந்தது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    Next Story
    ×