search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன்
    X
    சமயபுரம் மாரியம்மன்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 5-வது வார பூச்சொரிதல் விழா

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 5-வது வாரமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தஆண்டு பூச்சொரிதல் திருவிழா கடந்தமாதம் 7-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல்விழா நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று 5-வது வாரமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    பூச்சொரிதல் விழா

    மேலும், பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஏராளமான பக்தர்கள் பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் சுமந்து சென்று சமயபுரம் நால்ரோட்டில் இருந்து, கடைவீதி வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர்.

    கடைசி வார பூச்சொரிதல் விழா என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் வழிப்பறி செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணியில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×