என் மலர்
ஆன்மிகம்

மலர் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா: பூசாரி மட்டுமே தீ மிதித்தார்
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே, மாரியம்மன் தாயே என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள மலைக்கிராமம் தாளவாடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு மலர் மற்றும் ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து தாளவாடி மாரியம்மனுடன், கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் நடந்தது. பின்னர் நேற்று காலை 5 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்சவ சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்டன. பின்னர் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பக்தர்கள் 4 பேர் காவல் தெய்வங்கள் வேடம் அணிந்து முன்னே சென்றனர். இதையடுத்து அங்கிருந்து கோவிலுக்கு அம்மன் ஊர்வலம் சென்றது.
கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை சுமந்தபடி குண்டத்தை நோக்கி சென்றார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே, மாரியம்மன் தாயே என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீள குண்டத்தில் பூசாரி சிவண்ணா இறங்கி தீ மிதித்து நேராக கோவிலின் கருவறைக்கு சென்றார். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராகவேந்திரா கூறுகையில், ‘தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் குண்டம் அருகில் உள்ள முஸ்லிம் மசூதி வரை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக இந்த குண்டம் விழா நடைபெறுகிறது,’ என்றார்.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு மலர் மற்றும் ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து தாளவாடி மாரியம்மனுடன், கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் நடந்தது. பின்னர் நேற்று காலை 5 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்சவ சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்டன. பின்னர் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பக்தர்கள் 4 பேர் காவல் தெய்வங்கள் வேடம் அணிந்து முன்னே சென்றனர். இதையடுத்து அங்கிருந்து கோவிலுக்கு அம்மன் ஊர்வலம் சென்றது.
கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை சுமந்தபடி குண்டத்தை நோக்கி சென்றார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி தாயே, மாரியம்மன் தாயே என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீள குண்டத்தில் பூசாரி சிவண்ணா இறங்கி தீ மிதித்து நேராக கோவிலின் கருவறைக்கு சென்றார். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராகவேந்திரா கூறுகையில், ‘தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் குண்டம் அருகில் உள்ள முஸ்லிம் மசூதி வரை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக இந்த குண்டம் விழா நடைபெறுகிறது,’ என்றார்.
Next Story






