search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகுகுத்தியும், பால் குடம் எடுத்து வந்தனர்.
    X
    பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகுகுத்தியும், பால் குடம் எடுத்து வந்தனர்.

    வடக்குப்புற காளியம்மன் கோவில் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    வடக்கு புற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகுகுத்தியும், பால் குடம் எடுத்து வந்தனர்.
    கொட்டாம்பட்டியில் உள்ள வடக்குபுற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டும் வழக்கம்போல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று 8 நாட்கள் காப்பு கட்டிய பக்தர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு நேற்று காலையில் கிராம தெய்வமான பொய்சொல்லா மெய் அய்யனார் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகுகுத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சிவக்களம். சின்னகொட்டாம்பட்டி, சந்தைபேட்டை, மந்தைதிடல் வழியாக சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    மேலும் திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் வாணவேடிக்்கை நடைபெற்றது. கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×