
இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும், 60 அடி அலகு குத்தியும், விமான அலகில் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடந்து தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(புதன்கிழமை) திருவிளக்கு பூஜையும், அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராஜா, பாலசுப்பிரமணியன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.