என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்17 March 2021 4:57 AM GMT (Updated: 17 March 2021 4:57 AM GMT)
ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் சந்தைத்தோப்பில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. மேலும் மயானக்கொள்ளை, இருள்முக உற்சவம், பஞ்சமுக உற்சவம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 5 மணிக்கு தாண்டவராயசாமிக்கும், அங்காளபரமேஸ்வரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதையொட்டி காலை 5 மணிக்கு தாண்டவராயசாமிக்கும், அங்காளபரமேஸ்வரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X