search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    பங்குனி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

    பங்குனி மாத பிறப்பையொட்டி, பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பங்குனி மாத பிறப்பையொட்டி, பழனி முருகன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் கலசபூஜை, சிறப்பு யாகம் நடைபெற்று தீபாராதனை, 16 வகை அபிஷேகம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து சாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதேபோல் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில்நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    Next Story
    ×