என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பூட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பூட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பூட்டி கிடக்கும் தெப்பக்குளம்

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளம் பூட்டி கிடக்கிறது. இதனால் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்திப்பெற்ற ேகாவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துதல், கோழி காணிக்கை, நாணய காணிக்கை, பால்குடம் எடுத்தல், பொங்கலிடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவது வழக்கம். இவர்களில் பலர் முடிகாணிக்கை செலுத்துகிறார்கள். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தற்போது கோவில் அருகே உள்ள தெப்பக்குளமும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்துமிடத்தில் குளியலறையும் பூட்டி கிடக்கிறது. இது முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு அவதியை ஏற்படுத்தி உள்ளது.

    முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகே உள்ள குடிநீர் குழாயில் வரும் சிறிதளவு தண்ணீரில் பக்தர்கள் தட்டுத்தடுமாறி குளிக்க வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களாக தெப்பக்குளம் பூட்டிக்கிடப்பதால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    கோவில் வளாகத்தை தூய்மையாக பராமரிப்பதுடன், தேவையான குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூட்டிக்கிடக்கும் கோவில் குளத்தை திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×