என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராமேசுவரம் கோவிலில் நாளை சாமி-அம்பாள் தேரோட்டம்: இன்று இரவு வெள்ளிதேரோட்டம்
Byமாலை மலர்11 March 2021 7:52 AM GMT (Updated: 11 March 2021 7:52 AM GMT)
மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை சாமி-அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. இன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சாமி- அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சாமி அம்பாள் விலைமதிப்பற்ற முத்தங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் எட்டாம் நாளான மாசி மகா சிவராத்திரியான இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடராஜர், சிவகாமி அம்பாள் கேடயத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் சாமி-அம்பாள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மகா சிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவில் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
திருவிழாவின் 9-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சாமி- அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சாமி அம்பாள் விலைமதிப்பற்ற முத்தங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் எட்டாம் நாளான மாசி மகா சிவராத்திரியான இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடராஜர், சிவகாமி அம்பாள் கேடயத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் சாமி-அம்பாள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மகா சிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவில் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
திருவிழாவின் 9-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X